நடன நிகழ்ச்சிகள் - ஒரு சாடல்.

|

இங்கு சிங்கையில் தெரியும் தமிழ் சேனல்கள் சன், விஜய், வசந்தம் மற்றும் வண்ணத்திரை ஆகிய நான்கும். பொதுவாக தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதில்லை அது நம்முடைய நேரத்தைக் கொன்று கொளுத்திப்போடும் என்பதால். அதிகமாய் பாடல்களை கேட்பதோடு சரி, கேட்டுக்கொண்டு நமது வேலைகளைத் தொடரலாம் என்பதால். நமது மனநிலைக்கேற்றவாறுதான் எந்த ஒரு பாடலாயிருந்தாலும் நம்முள் ஆக்கிரமிப்பதும் புறந்தள்ளப்படுவதும்.


நடன நிகழ்ச்சிகளுடன் கூடிய சில நிகழ்ச்சிகளை எதேச்சையாய் பார்க்க நேர்ந்தபோது என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலாமல் மனம் கொதிப்புறவே இந்த இடுகை.

பாய்ஸ் VS கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியும் அதற்கு போட்டியாய் ராணி 6 ராஜா யாரு என்ற நிகழ்ச்சிகள் மொத்தமாய் கலாச்சார சீர்கேடாய் இருக்கிறது.

எல்லாம் செயற்கைத்தனமாயும், போட்டி பொறாமை என நாடகத்தனமாயும் இருக்க, குறிப்பாக ராணி 6... ல் இதுவரை சினிமாக்களில் மட்டுமே கண்டுவந்த அரைகுறை ஆடைகளில் ஆபாசமான அங்க அசைவுகளுடன் கூடிய நிகழ்வுகள் வெகு சாதாரணமாய்... கொடுமை.

இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது. இதற்கு அவர்கள் விளம்பரப்படுத்தும் உத்திகள் யாவும் பார்க்கும் போது ஆகா, தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.

இந்த இரட்டைவேடமிடும் இந்த கலாச்சாரத்தை சீரழிக்கும் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா? நமது குழந்தை செல்வங்களை இந்த மாய வலையில் வீழ்ந்து விடாமால் பாதுகாப்போமா?

தவறெனில் பின்னூட்டத்தில் சுட்டுங்கள்...

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB