எஸ்.எம்.எஸ். பற்றிய எண்ணம்...

|


 மாமா பையன் முரளி எனக்கு அனுப்பின மெயில அப்படியே கட் அன் பேஸ்ட் பண்ணியிருக்கேன்! எதற்கு இந்த இடுகைன்னு கடைசியா!







 இந்த காலத்து இளைஞர்கள் இந்த மோகத்தில் ரொம்பவும் நேரத்தை வீணாக்குகிறார்கள். சில பேர் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்து நான் டரியல் ஆகியிருக்கிறேன்! என் சித்தி பையன் கல்லூரியில் படிக்கிறான்... ஒரு நாளைக்கு அவனுக்கு வந்து அனுப்பும் தகவல்கள் பற்றி விசாரிக்க மயக்கமே வந்து விட்டது. அவனிடம் அது பற்றியெல்லாம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டு கொஞ்சம் இதமாய் அட்வைஸ்... இப்போது குறைத்திருப்பான் என எண்ணுகிறேன்!


இது பற்றிய எனது கருத்து சரியா என தெரியவில்லை, பகிர்ந்து கொள்ளுங்களேன்...

குறிப்பு:

அவர்கள் செல்ஃபோனில் வைத்திருக்கும் தகவல்களைப்பற்றி ஒரு தனி இடுகையாய் பிறகு எழுதுகிறேன்...

வெந்த புண்ணில் வேல்...

|

ஈழம் தொடர்பாய் தமிழினத்தலைவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை நன்றாய் சூடேற்ற அதற்கு இந்த இடுகை.


ஐயா,

ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய ஈரம், பரிவு கூட உங்களுக்கு இல்லாமல் போனதேன்? தனி ஈழம் அமைத்து தரச் சொல்லவில்லை... எம்மவர் வாழ்வே கேள்வியாய் வழியின்றி இருக்க முக்கிய காரணம் இந்திய அரசு இலங்கைக்கு விடுதலை புலிகளை அழிக்க கொடுத்த தொடர் ஊக்கமும், ஆயுதங்களோடு ஆதரவும் தான். உங்களின் தயவால் இருந்த காங்கிரஸ் ஆட்சியை மிரட்டியாவது உயிர்ப்பலிகளை கொஞ்சம் தடுத்திருக்கலாமே?

மகன், பேரன், மகள் என உங்களின் குடும்பத்தாரின் பதவிக்கே டெல்லியில் கால் கடுக்க காத்திருந்தீரே அப்போதுதான் இங்கு பிரபாகரன் இறந்ததாய் தகவல். பதபதைத்துப் போனோம். இன்று அருமையாய் ஒரு அறிக்கையை வெளியிட்டு எங்களை இன்னமும் முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். எழுதவே மனம் கூசுகிறது. தயவுசெய்து இதைப்பற்றி பேசாமலாவது இருங்களேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல்!

இப்படிக்கு ஒரு மானமுள்ள தமிழன்....

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB