தான் தான் பெரிதென்று
தன்னினம் இழித்துவோர்
இனமானம் காக்க
என்னமாய் போராட்டம்
தான் தான் நற்குடி
தறிகெட்டோர் மற்றெல்லாம்
வீண் வாதம் செய்தலில்
விளங்குது அவர்குடி.
பசுவின் சாணம்மென
புலம்பும் உமதெல்லாம்
வீசும் மணத்துடன்
எருமையின் சாணமோ?
ஏசும் முன் யோசிப்போம்
ஏசுதலிம் கண்ணியம்
என்றுமே இருத்தல்தான்
பேசுதலில் நன்று
மழித்த தன்மானம்
மகிழ்வாய் உமைப்பற்றி
வழிதொடர்வோர் புரியாமல்
வாய்க்கு வந்தபடி
இழிச்சொல்லால் கவியென்ற
ஈனத்தை எடுத்தெறிந்து
கழிவென கழித்திட்டு
காறியதை உமிழ்ந்திடுவோம்...
நற்குடியோ நாமெல்லாம்...
வகை : கவிதை... | author: பிரபாகர்எஸ்.எம்.எஸ். பற்றிய எண்ணம்...
வகை : எண்ணங்கள்... | author: பிரபாகர் மாமா பையன் முரளி எனக்கு அனுப்பின மெயில அப்படியே கட் அன் பேஸ்ட் பண்ணியிருக்கேன்! எதற்கு இந்த இடுகைன்னு கடைசியா!
இந்த காலத்து இளைஞர்கள் இந்த மோகத்தில் ரொம்பவும் நேரத்தை வீணாக்குகிறார்கள். சில பேர் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்து நான் டரியல் ஆகியிருக்கிறேன்! என் சித்தி பையன் கல்லூரியில் படிக்கிறான்... ஒரு நாளைக்கு அவனுக்கு வந்து அனுப்பும் தகவல்கள் பற்றி விசாரிக்க மயக்கமே வந்து விட்டது. அவனிடம் அது பற்றியெல்லாம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டு கொஞ்சம் இதமாய் அட்வைஸ்... இப்போது குறைத்திருப்பான் என எண்ணுகிறேன்! இது பற்றிய எனது கருத்து சரியா என தெரியவில்லை, பகிர்ந்து கொள்ளுங்களேன்... குறிப்பு: அவர்கள் செல்ஃபோனில் வைத்திருக்கும் தகவல்களைப்பற்றி ஒரு தனி இடுகையாய் பிறகு எழுதுகிறேன்... |
Subscribe to:
Posts (Atom)



