தான் தான் பெரிதென்று
தன்னினம் இழித்துவோர்
இனமானம் காக்க
என்னமாய் போராட்டம்
தான் தான் நற்குடி
தறிகெட்டோர் மற்றெல்லாம்
வீண் வாதம் செய்தலில்
விளங்குது அவர்குடி.
பசுவின் சாணம்மென
புலம்பும் உமதெல்லாம்
வீசும் மணத்துடன்
எருமையின் சாணமோ?
ஏசும் முன் யோசிப்போம்
ஏசுதலிம் கண்ணியம்
என்றுமே இருத்தல்தான்
பேசுதலில் நன்று
மழித்த தன்மானம்
மகிழ்வாய் உமைப்பற்றி
வழிதொடர்வோர் புரியாமல்
வாய்க்கு வந்தபடி
இழிச்சொல்லால் கவியென்ற
ஈனத்தை எடுத்தெறிந்து
கழிவென கழித்திட்டு
காறியதை உமிழ்ந்திடுவோம்...
December27,2009
December
27,
2009
நற்குடியோ நாமெல்லாம்...
வகை : கவிதை... | author: பிரபாகர்
Subscribe to:
Posts (Atom)