எங்கு போய் முடியும்?....

|


எனது நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலை வெட்டி கீழே ஒட்டியிருக்கிறேன், மிகுந்த வேதனையோடு... 

Today I read a comment in one of the Tamil daily website. It hurts a lot… Just to share with you all


 இன்று காலை பென்னாகரம் தொகுதியில் உள்ள நண்பனுக்கு போன் செய்தேன்... அவன் குடும்ப வோட்டுரிமை முழுவதும் விற்று விட்டானாம்....(ஏழு) விலை என்ன தெரியுமா ....ஒரு அரசாங்க ஊழியரான அவனது அப்பாவின் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம்,அதாவது பதினான்காயிரம் பிளஸ் வெட்டி ,ஷர்ட் சாரி ,கடந்த பத்து நாட்களாக வண்டிக்கு பெட்ரோல் அவனுக்கு பெட்ரோல் (குவாட்டர்).... தினப்படி ஒருமாதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு... இப்படி நீள்கிறது பட்டியல் ..... இதெல்லாம் வழங்கியது ஆளும்கட்சிமட்டும் தான் (இவன் வேற கட்சி கிட்ட வாங்கலையாம்) ஜென்டில் மேன்......???? இதுல கேவலமான ஒரு விஷயம் அவன் எம்பிஎ பட்டதாரி....... வாழ்க தேர்தல் கமிஷன்.... வளர்க முக குடும்பம்.... 

முன்பு எழுதிய கவிதை(?) இங்கு பொறுத்தமாய் இருக்குமென எண்ணுகிறேன்...

பயம்...

எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...



****

கண்ணிருந்தும்...


காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..

சுவராஸ்யமான பின்னூட்டம்...

|


பாலா ரோஸ்விக்குடன்...

சுதாகரின் (பித்தனின் வாக்கு) இடுகையில் பின்னூட்டத்தில் நம்ம பாலா ஒர் சம்பவத்தை அழகாய் சொல்ல, கேபிள் அண்ணாவுக்கு பின்னூட்டத்தையும் சேர்த்து ஒரு இடுகையாய் இங்கே!

ஐயா (சில்க்)பித்தன் அவர்களே!


பதிவு மிக நன்றாக இருந்தது! உங்களைப்போலவே எனக்கும் ஒரு அனுபவம்.


பத்தாவது படித்து முடிக்கும் வரை தனியாக சினிமாவுக்கு போனதில்லை. குடும்பத்துடன் தான். என்னுடைய பத்தாவது தேர்வு முடிந்தவுடன் தனியாக சினிமாவுக்கு போக அனுமதி கிடைத்தது. ஏதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்து போஸ்டரை பார்த்துவந்து கிளம்பிக்கொண்டு (கிளப்பியல்ல) இருந்தேன். பக்கத்தில் (3 km ) இருந்த டூரிங் டாக்கீஸ், படம் : இளமை ஊஞ்சலாடுகிறது. எனக்கு படத்தின் தன்மை தெரியாது. என் தந்தைக்கு தெரியும் போல். அதுவரை அவரும் கேட்கவில்லை, நானும் என்னபடம் என்று சொல்லவில்லை.


சைக்கிளை எடுத்து வெளியே வைத்து காற்று அடித்தேன். துடைத்தேன். மணி பார்த்தேன். கிளம்ப சரியாக இருந்தது. வெளியே வந்தேன்.


அப்பொழுது நடந்தது கீழே:


ட்ட்
அப்பா: பார்த்து போயிட்டு வா.
நான்: சரிங்கப்பா.
அப்பா: எந்த தியேட்டர்?
நான்: ' xxxxxxxxxx ' தியேட்டர்.
அப்பா: என்ன படம்?
நான்: 'இளமை ஊஞ்சலாடுகிறது'
அப்பா: இளமை உஞ்சலாடுதோ, கமினாட்டி என்ன படத்துக்கு போகுது பாரு. உருப்புடவாபோற நீ. சைக்கிள வச்சிட்டு போய் மாட்டுக்கு தண்ணி காட்டு.
நான்: திரு திருவென்று விழித்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அப்பொழுது. ஆனால் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி மட்டும் கிளம்பிவிட்டது.


அதே வெறியுடன் அந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன்.
இப்படிதான் ஊஞ்சலாடி கிளம்பியது என் இளமை!


இப்படிக்கு,
பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை ) பாலா.

இது கேபிள் அண்ணாவுக்கு இட்டிருக்கும் பின்னூட்டம்...


காணவில்லை அறிவிப்பு


பெயர்: கேபிள் சங்கர்
தொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)
வயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.
காணாமல் போன இடம் : சிங்கப்பூர்
சேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.
அடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )


கண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.
பின்னூட்டங்களில் அசத்தும் பாலா இடுகையும் எழுத வேண்டும் எனும் அன்பு வேண்டுகோளை வைக்கிறேன்...

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB